ஆணை இடு அன்பே!!!




ஆணை இடு அன்பே! 
உனக்காய் அத்தனையும் செய்ய காத்திருக்கிறேன்..

பலாயிரம் கோடிஆண்டுகளாக 
மறைந்திருந்த புதையல் போல,,,
பால் வண்ணம் மாறா நிலவு போல;;;
பக்கம் பக்கமாய் எழுதிய கவிதை போல,,
கேட்டதெல்லாம் கிடைக்கும் மந்திரம் போல;;;
கொஞ்ச வரும் குழந்தை குடியிருக்கும் கருவறை போல ;;;
தஞ்சம் என்றும் வருவாரை வாழ வைக்கும் தலைவன் போல,,, 
வாடாமல் சிரிக்கும் வண்டுகள் மொய்க்கும் மலரை போல;
என் வானமெல்லாம் இளஞ்சிவப்பாய்,,,
வார்த்தையில் எல்லாம் இனிப்பாய்;;;
என்னை வாழ வைத்தவனே!

ஆணை இடு அன்பே!
உனக்காய் அத்தனையும் செய்ய காத்திருக்கிறேன்...


*** யாமி ***




6 comments:

  1. அருமை, வளமான தமிழ்,

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. உங்கள் படைப்புகள் அனைத்தும் அழகு..

    ReplyDelete

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...