காதலிக்கிறேனடா உன்னை...

உன் கழுத்தில் - கத்தி
வைத்தா?கேட்டேன்;
என் கழுத்தில்
மாலையிடவா என்று 
இல்லையே!!!

உன்னுடன் சேர்ந்து 
ஊர் சுற்றவா 
விரும்பினேன்;
இல்லையே!!

நீ பார்த்திருக்க
வேண்டாம்;
உன் பரிசுப் பொருட்கள்
வேண்டாம்;

பகல் இரவாய் 
கொஞ்சல்களும்;
பக்கம் பக்கமாய்
கடிதங்களும் வேண்டாம்,,,























நீ என்னை நேசிக்க கூட
வேண்டாம்...

நான் உன்னை
காதலிப்பதையும் -உனக்காய்
காத்திருப்பதையும்
தடுக்காமல் இருந்தாலே
போதுமடா...



அதுவே என் காதலுக்கு 
வெற்றி தான்...

வெற்றி...


முன்னால் நிற்கும் 
மரங்களை எல்லாம்
முந்திக் கொண்டு
செல்கிறேன்;
காலை நேர
நடை பயணத்தில்...

என் தேவதை

அவன் நிழல் விழும் 
இடத்தில் கூட;
என் பாதம் படுவதை
நான் விரும்பவில்லை,,,
என் தேவதைங்க அவன்...



சந்தோஷம்


நீ விலகி போனால்;
நான் உன்னை
விட்டு போவேன்
என நினைத்தாயா?
இல்லை என்னவனே!
தள்ளி நின்று ரசிக்கிறேன் 
நானில்லாமல்
நீ சந்தோஷமாய் வாழ்வதை...




கோபக்காதல்


நானும் கோழை தான்;;;
அவன் எத்தனை
வெறுத்தாலும்,,,

எனக்கு கோவப்படவே
தெரியவில்லையே???

வெட்கம்

அப்படி பார்க்காதேடா;
பகல் இரவு பாராமல் 
பூத்து விடுகிறது,,,
வெட்கம்...




பூந்தோட்டம்

என் இதயமானது...
அழகான
பூந்தோட்டமாகிப் போனது 
வாடாமல்;;;
அவன் நினைவுகள்
தினம் மலர்வதால்...