அமிர்தம்



வியர்வையிலேயே
குளித்து போயி
தேகமெல்லாம்
கருத்துப் போன
என் ஆசை மாமாவே;;;
கத்திரிக்காய் கடைசலோடு
கறியும் சோறும் சமைச்சு வச்சு,
உனக்கு பிடிச்சதெல்லாம்
செஞ்சு வச்சு;;;
ஆறிடாம பத்திருக்கேன்
ஆவலோடு காத்திருக்கேன்,,,
நீ மிச்சம் வச்ச பாத்திரத்தில்
உன் எச்சில் பட்ட
உணவை உண்டு;;;
ஆயுள் முழுதும் உன்னோடு
அன்பாய் வாழக் காத்திருக்கேன்...

யாமிதாஷா...




4 comments:

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...