உன் கழுத்தில் - கத்தி
வைத்தா?கேட்டேன்;
என் கழுத்தில்
மாலையிடவா என்று
இல்லையே!!!
உன்னுடன் சேர்ந்து
ஊர் சுற்றவா
விரும்பினேன்;
இல்லையே!!
நீ
பார்த்திருக்க
வேண்டாம்;
உன் பரிசுப் பொருட்கள்
வேண்டாம்;
பகல்
இரவாய்
கொஞ்சல்களும்;
பக்கம் பக்கமாய்
கடிதங்களும்
வேண்டாம்,,,
நீ என்னை நேசிக்க கூட
வேண்டாம்...
நான் உன்னை
காதலிப்பதையும் -உனக்காய்
காத்திருப்பதையும்
தடுக்காமல் இருந்தாலே
போதுமடா...
அதுவே என் காதலுக்கு
வெற்றி தான்...
முன்னால் நிற்கும்
மரங்களை எல்லாம்
முந்திக் கொண்டு
செல்கிறேன்;
காலை
நேர
நடை பயணத்தில்...
அவன் நிழல் விழும்
இடத்தில் கூட;
என் பாதம் படுவதை
நான் விரும்பவில்லை,,,
என் தேவதைங்க
அவன்...
நீ விலகி போனால்;
நான் உன்னை
விட்டு போவேன்
என நினைத்தாயா?
இல்லை என்னவனே!
தள்ளி நின்று ரசிக்கிறேன்
நானில்லாமல்
நீ சந்தோஷமாய் வாழ்வதை...
நானும் கோழை தான்;;;
அவன் எத்தனை
வெறுத்தாலும்,,,
எனக்கு கோவப்படவே
தெரியவில்லையே???
அப்படி பார்க்காதேடா;
பகல் இரவு பாராமல்
பூத்து
விடுகிறது,,,
வெட்கம்...
என் இதயமானது...
அழகான
பூந்தோட்டமாகிப் போனது
வாடாமல்;;;
அவன் நினைவுகள்
தினம்
மலர்வதால்...