என் அவன்
பாவப்பட்ட என் மனசு
அவன் பாசத்துக்கு
வாக்கப் பட்டு;;;
பசி,தூக்கம் இல்லாம
பைத்தியம் போல
அலையவிட்ட,,,
அவன்
எங்கிருந்தோ வந்தானோ???
எனக்கு
ஏன் அன்பைத் தந்தானோ???
ஏந்தி நிற்கவில்லையே
அவனிடம்;;;
இப்போ
ஏங்கித் தவிக்க விட்டானே
தனிமையுடன்...
யாமிதாஷா...
மௌனம் வேண்டாமே!
மனதில் உள்ளதை
பகிர்ந்து விடுங்கள்;
மௌனமாய் மட்டும்
இருந்து விடாதீர்கள்;
மௌனத்தின் இரைச்சலை
நம்மால் தாங்க முடியாது...
பகிர்ந்து விடுங்கள்;
மௌனமாய் மட்டும்
இருந்து விடாதீர்கள்;
மௌனத்தின் இரைச்சலை
நம்மால் தாங்க முடியாது...
முகவரி...
என்னை
நீ வெட்டிப்
போட்டிருந்தால் கூட
கூடித் தின்ன
ஒரு நாயும்
வந்திருக்காது...
என்னை நீ
கொன்றிந்தால் கூட
கூட்டம் என்னவோ
குறைவாய் தான்
இருந்திருக்கும்...
என்னை நீ
அதிகப்படியான
வார்த்தைகளால்
அசிங்கப்படுத்தி இருந்தால் கூட
மறுபடியும் வந்து
"உன்னை நேசிக்கிறேன்"
என்று தான் கூறி இருப்பேன்...
வெற்றுக்காகிதம் என்னை
வேரோடு மாற்றி
வேகக் கவிதாயினி ஆக்கினாய்...
ஒன்றை மட்டும்
புரிந்து கொள்
என்னவனே!
நீ பிரிந்து
போனதால் மட்டும்
என் காதல்
அழிந்து விடும் என்ற
எண்ணத்தை மறந்து விடு...
மரணப்படுக்கையிலும்
என் இதயத்தின்
கடைசி துடிப்பு நின்றாலும்,
உன் நினைவுகளை சுமந்து
உனக்காய் கண்ணீர் வடித்த
என் காதலின் நினைவுகள்
உன்னைச் சுற்றியே இருக்கும்;
உன்னை இன்னும் அதிகமாய்
காதலித்த படி...
யாமிதாஷா...
காதலிக்கிறேனடா உன்னை...
உன் கழுத்தில் - கத்தி
வைத்தா?கேட்டேன்;
என் கழுத்தில்
மாலையிடவா என்று
இல்லையே!!!
உன்னுடன் சேர்ந்து
ஊர் சுற்றவா
விரும்பினேன்;
இல்லையே!!
நீ பார்த்திருக்க
வேண்டாம்;
உன் பரிசுப் பொருட்கள்
வேண்டாம்;
பகல் இரவாய்
கொஞ்சல்களும்;
பக்கம் பக்கமாய்
கடிதங்களும் வேண்டாம்,,,

நீ என்னை நேசிக்க கூட
வேண்டாம்...
நான் உன்னை
காதலிப்பதையும் -உனக்காய்
காத்திருப்பதையும்
தடுக்காமல் இருந்தாலே
போதுமடா...
அதுவே என் காதலுக்கு
வெற்றி தான்...
வைத்தா?கேட்டேன்;
என் கழுத்தில்
மாலையிடவா என்று
இல்லையே!!!
உன்னுடன் சேர்ந்து
ஊர் சுற்றவா
விரும்பினேன்;
இல்லையே!!
நீ பார்த்திருக்க
வேண்டாம்;
உன் பரிசுப் பொருட்கள்
வேண்டாம்;
பகல் இரவாய்
கொஞ்சல்களும்;
பக்கம் பக்கமாய்
கடிதங்களும் வேண்டாம்,,,

நீ என்னை நேசிக்க கூட
வேண்டாம்...
நான் உன்னை
காதலிப்பதையும் -உனக்காய்
காத்திருப்பதையும்
தடுக்காமல் இருந்தாலே
போதுமடா...
அதுவே என் காதலுக்கு
வெற்றி தான்...
சந்தோஷம்
நீ விலகி போனால்;
நான் உன்னை
விட்டு போவேன்
என நினைத்தாயா?
இல்லை என்னவனே!
தள்ளி நின்று ரசிக்கிறேன்
நானில்லாமல்
நீ சந்தோஷமாய் வாழ்வதை...
Subscribe to:
Posts (Atom)