Showing posts with label அவன் ஆண் தேவதை. Show all posts
Showing posts with label அவன் ஆண் தேவதை. Show all posts

பெண்மை ...

அவன் 
பார்வையாலே 
என் பெண்மையை 
பேச வைக்கிறான்.
நாணமாய்...

யாமிதாஷா...



பார்வை...

அவனைக் 
காண வேண்டியே
வானம் தொடும் அளவிற்கு
வளர்ந்து செல்கிறது.
காட்டு மரங்கள்...

யாமிதாஷா

காதல்

இவள் நிறத்திற்கும் 
அவன் பணத்திற்கும் 
பொருத்தமே இல்லை! என்று 
பார்ப்பவர்கள் 
உணர்ந்து கொள்வதில்லையடா... 
நம் இதயத்தில் பிறந்த காதல்
உனக்கும் எனக்கும் 
இடையில் 
இன்னும் நம் குழந்தையாய் 
வாழ்கிறது என்பதை...

...யாமிதாஷா

எப்போது அனுமதிப்பாயடா?

உன் ஆடைக்குள் தென்றலாய்
நான் மாற மாட்டேனா? 
உன்னை உரசிக்கொண்டே இருக்க... 

உன் ஆனந்தப்புன்னகை

நானாக மாட்டேனா? 
உன் உதடருகே நான் சிரிக்க... 

உன் விரலாக மாறி 

தலை கோத மாட்டேனா??? 
காதலா! 
என்று தருவாய் , 
இதற்கெல்லாம் அனுமதி!!!

யாமிதாஷா

தெரிகிறதா உனக்கு...

காதலே! போதும்- 
இனி தென்றலாய் மாறி 
என் தேகம் தழுவாதே!!! 
உன்னில் அடிபடும் , 
சருகாய் 
பட்ட காயம் ; 
இன்னும் வலிக்கிறது
எனக்கு... 

பூவாய் உன்னை நினைத்தேன் - 

நீ புயலாய் மாறியது ஏனடா??? 
எனக்கே தெரியாமல் - நீ 
என்னுள், எப்படி நுழைந்தாய்??? 
நான் உன்னுள் புதைந்து , 
சிக்கி தவித்து , 
சின்னாபின்னம் ஆகிறேன். 
தெரிகிறதா அது உனக்கு???

யாமிதாஷா