கல்லறை காதல்...
உன் மனைவியிடம்
காட்டு;;;
என்னை கன்னா
பின்னாவென்று,,,
காதலித்தவளின்
கல்லறை
அதோ என்று...
நிழல்...
அவன் நினைவுகளுடன் நான்...
அனைத்தையும்
கற்றுத் தந்தான்
எனக்கு;;;
அவனில்லாமல்
தனிமையில்
எப்படி வாழ்வது
என்பதையும் சேர்த்து...
யாமிதாஷா...
மழையாய் நீ...
மழையாய் வருவது
நீ எனத் தெரிந்தால்
என்னவனே!
அதில்
என் உடல் தொடங்கி
உயிர் வரை
நனைப்பது;;;
நானாக மட்டும் தான்
இருக்க வேண்டும்....
யாமிதாஷா...
பெண்மை ...
அவன்
பார்வையாலே
என் பெண்மையை
பேச வைக்கிறான்.
நாணமாய்...
யாமிதாஷா...
பார்வை...
அவனைக்
காண வேண்டியே
வானம் தொடும் அளவிற்கு
வளர்ந்து செல்கிறது.
காட்டு மரங்கள்...
யாமிதாஷா
காதல்
இவள் நிறத்திற்கும்
அவன் பணத்திற்கும்
பொருத்தமே இல்லை! என்று
பார்ப்பவர்கள்
உணர்ந்து கொள்வதில்லையடா...
நம் இதயத்தில் பிறந்த காதல்
உனக்கும் எனக்கும்
இடையில்
இன்னும் நம் குழந்தையாய்
வாழ்கிறது என்பதை...
...யாமிதாஷா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)